Page copy protected against web site content infringement by Copyscape

Google
WWW தொடுவானம் தூரமில்லை

Monday, December 3, 2007

23.திருடா! ( thirudaa )

நம் தனிமையில்
நீ எதையெல்லாம்
என்னிடம் சில்மிசமாய்
செய்வாயோ,

அவையெல்லாம்
அறியாதவனாய்
இருந்து, என்னிடம்
கற்றுக்கொள்வாயே
திருடா!

சரி போ...

நீ கொடுத்தாலென்ன?
நான் கொடுத்தாலென்ன?

நமக்கு தேவை
ஒற்றை முத்தம்தானே!

21.சுவடு (suvadu)

என் இதயத்தின்
மேல் கால்வைத்து
கடந்து சென்ற
பலரில்

சுவடுகளை மட்டும்
விட்டுச் சென்றவள்
நீ!

Tuesday, November 20, 2007

20.அவள்! (avaL)


அப்போது..


நான்
கவிதையெழுதி
காதலிக்கவில்லை
அவளை
மனிதமந்தைகளின்
சூட்சமவலையில்
சிக்கிதவித்த போது
தாய்மடிவாசத்தை
அவள்மடியில்சுரந்தனள்

என்
எண்ணக்குதிரையை
எனக்கே அரியாமல்
விரட்டியடித்து,
வெற்றியின் சுவையை
அரியவவைத்தவள்
அவள்..

கனவு என்பதை
கவிதையாக
காணச்செய்தவள்...

புள்ளியில் தொடங்கி
அழகான கோலத்தில்
முடிக்கும் திறமையை
சிற்பியாக இருந்து
செதுக்கி ரசித்தவள்அவள்...

வெயிலின் அருமையை
வெயிலில் உணரச்சொன்னவளவள்..

கொட்டும்
ஒற்றை மழைத்துளியை
கயிரெனக்கொண்டு
வானமடையும் வித்தையை
சொன்னவள்..

என் மூச்சே
அவளென்றிருக்க
ஒருநாள்
அவள் சுவாசிப்பதை
நிறுத்திக்கொண்டாள்..
ஏன்? எதனால்?
என்று அறியும்
தைரியமில்லாமல்

காலத்தின்
கட்டளையாக
அவளின்
எண்ணக்குதிரையில்
பயணித்துக்கொண்டு...

கவிதைகளும் எழுதுகின்றேன்
இப்போது..

Monday, November 19, 2007

19. பெண்மனம்



எது புதைந்தது
என்று தெரியவில்லை


மனசெல்லாம்
வேர்பிடித்திருக்கின்றது...


பிடிங்கி எறிய
மனமில்லை என்றாலும்
நீரூற்றி வளர்க்க
ஏனோ மறுக்கின்றது.. மனம்!

இதயம் மார்பை விட்டு
வெளியே துடிப்பது போல்
அஞ்சி நடுங்குகின்றேன்..

வானம் பிளந்து
தலையில் வீழ்ந்திடுமோ
என்று தேம்பி அ௯ழுகின்றேன்..

திருவிழாக்கூட்டத்தின்
நடுவினிலும், தனிமையில்
தொலைந்துபோகின்றென்...

ஆகாரம் கூட எனக்கு
ஆதாரமற்று போனது..

என் வாழ்க்கை
நிமிடமுட்கள்
நகர்ந்து நகர்ந்து
காயங்களையே
காலங்கலாக்கின...

இதுவரை
மற்றவர்களின்
தேவைகளரிந்து
செய்துவந்த
உதவிகள் கூட
செய்ய மனமில்லாமல்
காரணங்களை தேடுகின்றது மூளை..

நான் பேசுவதை
என் காதுகள்
மட்டுமே கேட்கின்றது
மொழியினை உமையாக்கி...

தூரத்து அருகினில்
தொலைந்துபோகின்றன
அருகினில் உள்ளவைகள்..

நான் எதைத்தொலைத்துவிட்டேன்
என்று தெரியாதபோதும்
தேடல் எனக்கு பிடித்திருக்கின்றது..

ஒற்றை நீர்த்துளியாக இருந்தாலும்
மழையெனப் பெய்துவிடுகின்றது
என்னுள் ...

இதுவரை
உண்மை மட்டுமே
பேசியவள் இல்லை என்றாலும்
பொய் சொல்வது
பாவமாகத் தெரிவதில்லை..

விட்டில் பூச்சியாக
ஒளியில் அகப்பட்டாயே என்று
உள்ளுணர்வு சொன்னாலும்
இந்த ஒளியின் வீச்சிலிருந்து
விளகிக்கொள்ள மனமில்லை எனக்கு...

சூட்சம உலகினில்
சூழ்நிலைக்கைதியாக
ஒட்டிய அறையினில்
அடைந்துக்கிடப்பது
எதனால் என்று
தெரியவில்லை என்றாலும்..
அடைந்துக்கிடப்பது
பிடித்திருக்கின்றது...

என்னுள் வேர்பிடித்த
ஏதோ ஒன்றின் ஆணிவேரில்,
ஆதாரமாக இருக்கும்
ஏதோ ஒன்றினை
கண்டுகொள்ள நினைத்தாலும்

கண்ணீர்த்துளிகளையே
கன்னங்களில் பாய்சுகிறது
என் கண்கள்..

இப்போதும்
அந்த ஆணிவேர்
மற்றுமொரு
சல்லிவேரினை
முளைந்தெடுத்திருக்கும்
இத்தருணத்தில்.....


Wednesday, November 14, 2007

18.காதல் சொல்ல வந்தேன்



நீ
என்ன நிரங்களின்
மகளா?

நீ அரைந்த
என் கனனத்தில்

உன் கை வண்ணம்.

Wednesday, October 24, 2007

17.சிற்றெரும்பு தோழர்களே!

என்னுள் "நான்" என்பது
பசிக்கொண்ட சிங்கம்தான்

ஒருபோதும் சிற்றெரும்புகளை
உண்டு பசியாற்றிக்கொண்டதில்லை

ஒருநாள் "நான்" என்னுள்
இறந்துபோகக்கூடும்

அப்பொழுது அந்தசிற்றெரும்புகள்
பசியாரிக்கொள்ள மறப்பதில்லை...

என் ஞானமும் அவ்வாறே
சிற்றெரும்பு தோழர்களே...

Tuesday, October 16, 2007

16. அழகே! அழகு!

எல்லாக் காலங்களிலும்
அழகானவைகள்
அழகானதாகவே
இருக்கும் என்றால்

உன்னால் மட்டும்
எப்படி
நாளைவிட குறைவாக
நேற்றைவிட அதிகமான
அழகாக, இன்று மட்டும்
காண்பிக்கமுடிகிறது

சகியே!