நம் தனிமையில்
நீ எதையெல்லாம்
என்னிடம் சில்மிசமாய்
செய்வாயோ,
அவையெல்லாம்
அறியாதவனாய்
இருந்து, என்னிடம்
கற்றுக்கொள்வாயே
திருடா!
சரி போ...
நீ கொடுத்தாலென்ன?
நான் கொடுத்தாலென்ன?
நமக்கு தேவை
ஒற்றை முத்தம்தானே!
Monday, December 3, 2007
23.திருடா! ( thirudaa )
Posted by THOTTARAYASWAMY.A at 6:59 AM 2 comments
Labels: kavithai
21.சுவடு (suvadu)
என் இதயத்தின்
மேல் கால்வைத்து
கடந்து சென்ற
பலரில்
சுவடுகளை மட்டும்
விட்டுச் சென்றவள்
நீ!
Posted by THOTTARAYASWAMY.A at 6:36 AM 0 comments
Labels: kavithai
Tuesday, November 20, 2007
20.அவள்! (avaL)
நான்
என்
கனவு என்பதை
புள்ளியில் தொடங்கி
வெயிலின் அருமையை
கொட்டும்
என் மூச்சே
காலத்தின்
எண்ணக்குதிரையில்
பயணித்துக்கொண்டு...
கவிதைகளும் எழுதுகின்றேன்
Posted by THOTTARAYASWAMY.A at 6:35 AM 0 comments
Labels: kavithai
Monday, November 19, 2007
19. பெண்மனம்
பிடிங்கி எறிய
இதயம் மார்பை விட்டு
வானம் பிளந்து
திருவிழாக்கூட்டத்தின்
ஆகாரம் கூட எனக்கு
என் வாழ்க்கை
இதுவரை
நான் பேசுவதை
தூரத்து அருகினில்
நான் எதைத்தொலைத்துவிட்டேன்
ஒற்றை நீர்த்துளியாக இருந்தாலும்
இதுவரை
விட்டில் பூச்சியாக
சூட்சம உலகினில்
என்னுள் வேர்பிடித்த
கண்ணீர்த்துளிகளையே
இப்போதும்
Posted by THOTTARAYASWAMY.A at 6:07 AM 0 comments
Labels: kavithai
Wednesday, November 14, 2007
Wednesday, October 24, 2007
17.சிற்றெரும்பு தோழர்களே!
என்னுள் "நான்" என்பது
பசிக்கொண்ட சிங்கம்தான்
ஒருபோதும் சிற்றெரும்புகளை
உண்டு பசியாற்றிக்கொண்டதில்லை
ஒருநாள் "நான்" என்னுள்
இறந்துபோகக்கூடும்
அப்பொழுது அந்தசிற்றெரும்புகள்
பசியாரிக்கொள்ள மறப்பதில்லை...
என் ஞானமும் அவ்வாறே
சிற்றெரும்பு தோழர்களே...
Posted by THOTTARAYASWAMY.A at 6:38 AM 0 comments
Labels: kavithai
Tuesday, October 16, 2007
16. அழகே! அழகு!
எல்லாக் காலங்களிலும்
அழகானவைகள்
அழகானதாகவே
இருக்கும் என்றால்
உன்னால் மட்டும்
எப்படி
நாளைவிட குறைவாக
நேற்றைவிட அதிகமான
அழகாக, இன்று மட்டும்
காண்பிக்கமுடிகிறது
சகியே!
Posted by THOTTARAYASWAMY.A at 7:28 AM 0 comments
Labels: kavithai