Page copy protected against web site content infringement by Copyscape

Google
WWW தொடுவானம் தூரமில்லை

Monday, December 3, 2007

23.திருடா! ( thirudaa )

நம் தனிமையில்
நீ எதையெல்லாம்
என்னிடம் சில்மிசமாய்
செய்வாயோ,

அவையெல்லாம்
அறியாதவனாய்
இருந்து, என்னிடம்
கற்றுக்கொள்வாயே
திருடா!

சரி போ...

நீ கொடுத்தாலென்ன?
நான் கொடுத்தாலென்ன?

நமக்கு தேவை
ஒற்றை முத்தம்தானே!

21.சுவடு (suvadu)

என் இதயத்தின்
மேல் கால்வைத்து
கடந்து சென்ற
பலரில்

சுவடுகளை மட்டும்
விட்டுச் சென்றவள்
நீ!

Tuesday, November 20, 2007

20.அவள்! (avaL)


அப்போது..


நான்
கவிதையெழுதி
காதலிக்கவில்லை
அவளை
மனிதமந்தைகளின்
சூட்சமவலையில்
சிக்கிதவித்த போது
தாய்மடிவாசத்தை
அவள்மடியில்சுரந்தனள்

என்
எண்ணக்குதிரையை
எனக்கே அரியாமல்
விரட்டியடித்து,
வெற்றியின் சுவையை
அரியவவைத்தவள்
அவள்..

கனவு என்பதை
கவிதையாக
காணச்செய்தவள்...

புள்ளியில் தொடங்கி
அழகான கோலத்தில்
முடிக்கும் திறமையை
சிற்பியாக இருந்து
செதுக்கி ரசித்தவள்அவள்...

வெயிலின் அருமையை
வெயிலில் உணரச்சொன்னவளவள்..

கொட்டும்
ஒற்றை மழைத்துளியை
கயிரெனக்கொண்டு
வானமடையும் வித்தையை
சொன்னவள்..

என் மூச்சே
அவளென்றிருக்க
ஒருநாள்
அவள் சுவாசிப்பதை
நிறுத்திக்கொண்டாள்..
ஏன்? எதனால்?
என்று அறியும்
தைரியமில்லாமல்

காலத்தின்
கட்டளையாக
அவளின்
எண்ணக்குதிரையில்
பயணித்துக்கொண்டு...

கவிதைகளும் எழுதுகின்றேன்
இப்போது..

Monday, November 19, 2007

19. பெண்மனம்



எது புதைந்தது
என்று தெரியவில்லை


மனசெல்லாம்
வேர்பிடித்திருக்கின்றது...


பிடிங்கி எறிய
மனமில்லை என்றாலும்
நீரூற்றி வளர்க்க
ஏனோ மறுக்கின்றது.. மனம்!

இதயம் மார்பை விட்டு
வெளியே துடிப்பது போல்
அஞ்சி நடுங்குகின்றேன்..

வானம் பிளந்து
தலையில் வீழ்ந்திடுமோ
என்று தேம்பி அ௯ழுகின்றேன்..

திருவிழாக்கூட்டத்தின்
நடுவினிலும், தனிமையில்
தொலைந்துபோகின்றென்...

ஆகாரம் கூட எனக்கு
ஆதாரமற்று போனது..

என் வாழ்க்கை
நிமிடமுட்கள்
நகர்ந்து நகர்ந்து
காயங்களையே
காலங்கலாக்கின...

இதுவரை
மற்றவர்களின்
தேவைகளரிந்து
செய்துவந்த
உதவிகள் கூட
செய்ய மனமில்லாமல்
காரணங்களை தேடுகின்றது மூளை..

நான் பேசுவதை
என் காதுகள்
மட்டுமே கேட்கின்றது
மொழியினை உமையாக்கி...

தூரத்து அருகினில்
தொலைந்துபோகின்றன
அருகினில் உள்ளவைகள்..

நான் எதைத்தொலைத்துவிட்டேன்
என்று தெரியாதபோதும்
தேடல் எனக்கு பிடித்திருக்கின்றது..

ஒற்றை நீர்த்துளியாக இருந்தாலும்
மழையெனப் பெய்துவிடுகின்றது
என்னுள் ...

இதுவரை
உண்மை மட்டுமே
பேசியவள் இல்லை என்றாலும்
பொய் சொல்வது
பாவமாகத் தெரிவதில்லை..

விட்டில் பூச்சியாக
ஒளியில் அகப்பட்டாயே என்று
உள்ளுணர்வு சொன்னாலும்
இந்த ஒளியின் வீச்சிலிருந்து
விளகிக்கொள்ள மனமில்லை எனக்கு...

சூட்சம உலகினில்
சூழ்நிலைக்கைதியாக
ஒட்டிய அறையினில்
அடைந்துக்கிடப்பது
எதனால் என்று
தெரியவில்லை என்றாலும்..
அடைந்துக்கிடப்பது
பிடித்திருக்கின்றது...

என்னுள் வேர்பிடித்த
ஏதோ ஒன்றின் ஆணிவேரில்,
ஆதாரமாக இருக்கும்
ஏதோ ஒன்றினை
கண்டுகொள்ள நினைத்தாலும்

கண்ணீர்த்துளிகளையே
கன்னங்களில் பாய்சுகிறது
என் கண்கள்..

இப்போதும்
அந்த ஆணிவேர்
மற்றுமொரு
சல்லிவேரினை
முளைந்தெடுத்திருக்கும்
இத்தருணத்தில்.....


Wednesday, November 14, 2007

18.காதல் சொல்ல வந்தேன்



நீ
என்ன நிரங்களின்
மகளா?

நீ அரைந்த
என் கனனத்தில்

உன் கை வண்ணம்.

Wednesday, October 24, 2007

17.சிற்றெரும்பு தோழர்களே!

என்னுள் "நான்" என்பது
பசிக்கொண்ட சிங்கம்தான்

ஒருபோதும் சிற்றெரும்புகளை
உண்டு பசியாற்றிக்கொண்டதில்லை

ஒருநாள் "நான்" என்னுள்
இறந்துபோகக்கூடும்

அப்பொழுது அந்தசிற்றெரும்புகள்
பசியாரிக்கொள்ள மறப்பதில்லை...

என் ஞானமும் அவ்வாறே
சிற்றெரும்பு தோழர்களே...

Tuesday, October 16, 2007

16. அழகே! அழகு!

எல்லாக் காலங்களிலும்
அழகானவைகள்
அழகானதாகவே
இருக்கும் என்றால்

உன்னால் மட்டும்
எப்படி
நாளைவிட குறைவாக
நேற்றைவிட அதிகமான
அழகாக, இன்று மட்டும்
காண்பிக்கமுடிகிறது

சகியே!

16.நீ நான் உலகம்

உன்னைத் தவிர
எல்லாம் அழகழகாக
தோன்றுதடி

நீ பேரழகியாக
நான் என்னியமுதல்...

Monday, October 15, 2007

14.பூவே

உன்
உதட்டு வரிகளில்
எதை எழுதிவைத்திருக்கின்றாய்

என்று
வண்டுகள்
இப்படிப் பறந்து பறந்து
படித்துக்கொண்டிருக்கின்றன,

Friday, October 12, 2007

நீங்கள்

உலகத்திற்கு வேண்டுமென்றால்
நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்;
ஆனால் யாராவது ஒருவருக்கு
நீங்களே உலகமாக இருக்கலாம்.

Thursday, October 11, 2007

உலகத்திற்கு !

சொற்ப இரண்டு
நாட்களிலேயே,
நாளை என்பது
நேற்று என்றாகி விடுகிறது
உலகத்திற்கு !

Sunday, June 3, 2007

13.நீ மட்டும்

என்னுலகம்
நீயாக இருக்க

உலகம்
எதுவாக இருந்தால்
எனக்கென்ன?

Wednesday, May 30, 2007

12.கவிதை எழுதி கவிஞனாகி !

வண்ணங்கள்
போதவில்லை என்றா

வானவில்லில்
உன் வண்ணம்

மேகங்கள்
இல்லையென்றா

உன் கார்கூந்தல்
வானில்

நவமணிகள்
நாட்டிலில்லை என்றா

கண்மணிகள்
உன் உடம்பில்

தென்றலுக்கு
குளிர்ச்சியூட்டவா

வெளிவிடுகின்றாய்
உன் சுவாசங்களை

பூவினங்களுக்கு
மோச்சம்க் கிட்டவா

நீ தலைவாரி
பூச்சூடினாய்

நட்த்திரங்கள்
ஒளிபெறவா

நொடிப்பொழுதும்
கண்சிமிட்டுகிறாய்

அதிசயங்களில்
இடம் பெறவா

நடைபாதையில்
சுவடுகளை விட்டுவிடுகிறாய்

பெண்னினத்தில்
அழகி இல்லையென்றா

நீ உன்னை
படைத்துக்கொண்டாய்

எப்படி முடிப்பதென்று அரியாமல்
இப்படியே முடித்துவிடுகின்றேன்

நான்
கவிதை எழுதி
கவிஞனாகியதற்கு

உனக்கு
நன்றி.

11.ஒரு காதலன் கவிஞனாகின்றான்!

உன்னிடம் காதல் சொல்ல
ஒற்றை ரோஜாவோடு
வீட்டைவிட்டு வெளியேரிய போது

போர்கள உலகமும்
வாளேந்திய வீரர்களையும்

வீதீயின் நடுவே கண்டுகொண்டேன்

பயம் தைரியத்தை புதைத்தது
மனம் தோல்வியை தழுவிக்கொண்டது

ஆரத்தழுவிய ரோஜாமுட்கள்
விரல்களில் குத்தி ரத்தத்துளிகளை
எனக்கு பரிசளித்தது

சரி இனி என்செய்ய?

நீ என்னுள் விதைத்து விட்ட
கவிதைகளுக்கு நீரூற்றி
காதலித்துவிட முடிவெடுத்துவிட்டேன்

ஒரு காதலன்
கவிஞனாகின்றான்!

உன்னாலே.

Wednesday, May 23, 2007

10.தகரம்

எப்படிதான்
கண்டுகொள்கிறதோ

காட்டாறென
கடந்து செல்லும்
கூட்டத்தின் நடுவினில்

என்
கண்கள் உன்னை

சரிதான்
காந்தத்தின் ஈர்ப்புக்கு
முன்னால்

தகரம்
தப்பிக்கவாமுடியும்

Monday, May 21, 2007

9.தட்டாம்பூச்சி

என்னுள்

உனக்காக
காத்துக்கிடக்கும்
தருணங்களில்
எல்லாம்

சிறுவயதில் தட்டாம்பூச்சி
பிடித்த அனுபவங்களே
ஆழுமைசெய்கின்றன

8.மழைத்துளி

அந்ந மழைக்கால
சந்திப்புக்கு பின்

ஒவ்வொரு மழைத்துளியும்
உன் நினைவுகளில்
என்னை
வானத்திலிருந்து
விழச்செய்கிறது.

Friday, May 18, 2007

7.ஒருத்தி

என் கவிதைகள்
தவம்கிடந்து
வரமொன்று
பெற்றுக்கொண்டது
கடவுளிடம்

என்னவளை தவிர
இனி அழகிகளை
படைத்துவிட வேண்டாம்
என்று

யார் ஒருவரும்

உலகத்திலே நீ ஒருத்திதான்
அழகானவள்
என
வர்ணிக்க கூடாதென்பதற்காக.

Thursday, May 17, 2007

6.தனிமை

நீ ஒற்றை எழுத்தாக
இருந்தாலும்

என்னால் வாக்கியமாகதான்
வாசிக்க முடிகிறது

இது எதனால்? என்று
புரியாத வேளையின்
தனிமையும்
புத்தகமாகத்தான்
தெரிகின்றது.

5.அதே கண்கள்.

உன்
வருகைக்காக
காத்திருத்த
கண்கள்

கண்டப்பின்
கடந்துச் செல்லும் வரை
நிலத்தையே
பார்த்தது

அதே கண்கள்.

Tuesday, May 15, 2007

4.வீதி உலா

வெளிச்சங்களை
விட்டுவிடு

பாவம்
இருட்டை
தேடிப்பிடித்து
ஓளிந்துகொள்கிறது

சொன்னதை கேட்காமல்
வீதி உலா வந்துவிடுகிறாய்
பகலில் நீ.

Sunday, May 13, 2007

3.பூமரம்

உனக்காக
காத்துகிடக்கின்றேன்
அதே சாலையோர
இருக்கையில்

இன்றும்
பூத்திருக்கின்றது
எனக்கு பின்னால்
பூமரம்.

Thursday, May 10, 2007

2.குறங்கு மனசு

மனசை அன்பில்
வார்த்தெடுத்து
வசதியாக வாசலில்
வைத்தப் போதுதான்

அன்புக்குரியவர்களின்
அரவணைப்பை
அறிந்து கொண்டது
குறங்கு மனசு.

Monday, April 23, 2007

1.காஷ்மீர்

பதியம் போட்ட
வண்ண ரோஜாக்கள்
ஊரெல்லாம்
பூத்துக் குளுங்கியது

தினம்
விதவைகள்
நீரூற்ற!