Page copy protected against web site content infringement by Copyscape

Google
WWW தொடுவானம் தூரமில்லை

Wednesday, May 30, 2007

11.ஒரு காதலன் கவிஞனாகின்றான்!

உன்னிடம் காதல் சொல்ல
ஒற்றை ரோஜாவோடு
வீட்டைவிட்டு வெளியேரிய போது

போர்கள உலகமும்
வாளேந்திய வீரர்களையும்

வீதீயின் நடுவே கண்டுகொண்டேன்

பயம் தைரியத்தை புதைத்தது
மனம் தோல்வியை தழுவிக்கொண்டது

ஆரத்தழுவிய ரோஜாமுட்கள்
விரல்களில் குத்தி ரத்தத்துளிகளை
எனக்கு பரிசளித்தது

சரி இனி என்செய்ய?

நீ என்னுள் விதைத்து விட்ட
கவிதைகளுக்கு நீரூற்றி
காதலித்துவிட முடிவெடுத்துவிட்டேன்

ஒரு காதலன்
கவிஞனாகின்றான்!

உன்னாலே.

No comments: