Page copy protected against web site content infringement by Copyscape

Google
WWW தொடுவானம் தூரமில்லை

Wednesday, May 30, 2007

12.கவிதை எழுதி கவிஞனாகி !

வண்ணங்கள்
போதவில்லை என்றா

வானவில்லில்
உன் வண்ணம்

மேகங்கள்
இல்லையென்றா

உன் கார்கூந்தல்
வானில்

நவமணிகள்
நாட்டிலில்லை என்றா

கண்மணிகள்
உன் உடம்பில்

தென்றலுக்கு
குளிர்ச்சியூட்டவா

வெளிவிடுகின்றாய்
உன் சுவாசங்களை

பூவினங்களுக்கு
மோச்சம்க் கிட்டவா

நீ தலைவாரி
பூச்சூடினாய்

நட்த்திரங்கள்
ஒளிபெறவா

நொடிப்பொழுதும்
கண்சிமிட்டுகிறாய்

அதிசயங்களில்
இடம் பெறவா

நடைபாதையில்
சுவடுகளை விட்டுவிடுகிறாய்

பெண்னினத்தில்
அழகி இல்லையென்றா

நீ உன்னை
படைத்துக்கொண்டாய்

எப்படி முடிப்பதென்று அரியாமல்
இப்படியே முடித்துவிடுகின்றேன்

நான்
கவிதை எழுதி
கவிஞனாகியதற்கு

உனக்கு
நன்றி.

No comments: